முன்னாள் உலக நம்பர்-1 கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் அமெரிக்காவில் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
முன்னாள் உலக நம்பர்1 கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் அமெரிக்காவில் கைது

நியூயார்க்: அமெரிக்காவை சேர்ந்த கோல்ப் வீரர் டைகர் உட்ஸ். உலக முன்னாள் நம்பர்-1 வீரரான இவர் அமெரிக்காவின் தெற்கு ப்ளோரிடா பகுதியில்,  குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் சில மணி நேரங்களில்  சொந்த ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை டைகர் உட்ஸ் மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘நான்  செய்த அனைத்து விஷயங்களுக்கும் நானே பொறுப்பு ஏற்று கொள்கிறேன்.

மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் எதிர்பாராத  எதிர்வினையின் விளைவே இது.

மருந்துகளின் கலவை என்னை வெகுவாக பாதித்தது என்பதை என்னால் உணர முடியவில்லை. இது ஆல்கஹால்  அல்ல என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.

எனினும் குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு  கொள்கிறேன். இது போன்ற சம்பவம் இனி நடக்காதவாறு பார்த்து கொள்வேன்.

தற்போது போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிஉள்ளேன்’ என்றார்.

.

மூலக்கதை