சர்வதேச வாள்வீச்சு போட்டி தமிழக வீராங்கனை தங்கம் வென்றார்

தினகரன்  தினகரன்

சென்னை: ஐஸ்லாந்து நாட்டில் சர்வதேச வாள்வீச்சு போட்டியான சாட்டிலைட் உலக கோப்பை வாள்வீச்சு போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த பவானிதேவி சேபர் பங்கேற்றார். அடுத்தடுத்த போட்டிகளில் வென்று பவானிதேவி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிப்போட்டியில் ஜெர்மனி வீராங்கனை சாரா ஜேன் ஹாம்சனுடன் மோதினார். அதில் 15க்கு 13 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதுவரை சர்வதேச வாள்வீச்சு போட்டியில் இந்தியா சார்பில் தங்கம் வென்றதில்லை. இந்தநிலையில் தமிழகத்தை சேர்ந்த பவானிதேவி முதல்முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார்.

மூலக்கதை