பெண்களி்டம சேட்டையில் ஈடுப்பட்டவர்கள் கைது! முல்லைத்தீவில் சம்பவம்
முல்லைத்தீவு – விஸ்வமடு சந்தியில் மாலையில் வேலை முடிந்து செல்லும் பெண்களுடன் சேட்டை மற்றும் நக்கல் செய்தமை தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குற்றச்சாட்டுக்கு காரணமானவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் நான்கு இளைஞர்களைக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த பகுதியில் தொடர்ந்து கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைவாக நேற்று மாலை அப் பகுதிக்குச் சென்ற தர்மபுரம் பொலிஸ் குழுவினர் அவர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் நால்வரும் இரண்டு மணிநேரம் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் அறிவுரைகள் வழங்கப்பட்டு, நிபந்தனைகளுடன் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.