யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தொடரூந்து மீது தாக்குதல்
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடரூந்து மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் இராணுவ சிப்பாய் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
நாவற்குழி பிரதேசத்தில் வைத்து கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தொடரூந்தின் மீது இனம் தெரியாத இளைஞர்கள் சிலரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தாக்குதலின் போது மகேஷ் என்ற இராணுவ சிப்பாய் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
மேலும் படுகாயமடைந்த இராணுவ சிப்பாய் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த கல்வீச்சு தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.