போலீஸ்க்கு நன்றி தெரிவித்த ராஜமௌலி

தினமலர்  தினமலர்
போலீஸ்க்கு நன்றி தெரிவித்த ராஜமௌலி

சமீபத்தில் பாகுபலி-2 படத்தை இணையதளம் ஒன்றில் வெளியிட முயற்சி செய்த மோசடி கும்பலை காவல்துறை உதவியுடன் பிடித்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, போலீசாருக்கு நன்றி தெரிவித்துள்ளார். பைரசி எதிராக நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு பாகுபலி படக்குழு, ஆர்கா தயாரிப்பு மற்றும் ஒட்டுமொத்த திரையுலகம் சார்பில் நன்றி என்று கூறியுள்ளார் ராஜமெளலி.

பீகாரில் உள்ள தியேட்டர் ஒன்றுடன் தொடர்பு வைத்துக்கொண்ட இந்த திருட்டு விசிடி கும்பல், பாகுபலி-2 படத்தை டெக்னாலஜி உதவியுடன் திருட்டுத்தனமாக பதிவு செய்து, அதை தொடர்ந்து படத்தை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்கவேண்டும் என்றால் 15 லட்சம் ரூபாய் பணம் தரவேண்டும் என தயாரிப்பாளரை மிரட்டவும் செய்திருக்கிறார்கள். ஆனால் தயாரிப்பாளர் தரப்பு புத்திசாலித்தனமாக செயல்பட்டு போலீஸ் அதிகாரிகள் உதவியுடன் அந்த கும்பலை மடக்கி பிடித்தனர்.

மூலக்கதை