Elysee இல் குடியேறுகின்றனர் மக்ரோன் தம்பதியினர்!!
புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்ற இம்மானுவல் மக்ரோன் மற்றும் அவரது மனைவி Brigitte Macron, இருவரும் இந்த வாரத்தில் ஜனாதிபதி மாளிகையில் குடியேறுகின்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியான செய்திகளின் படி, இந்த வார முடிவில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தனது மனைவியுடன் எலிசேயில் குடியேறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் பெண்மணியான Brigitte Macron க்கு உரிய பிரம்மாண்டமான அறை ஒன்று தரைத் தாலத்தில் அமைக்கப்படுள்ளது. இந்த அறையின் தோற்றம் முற்றாக மாற்றப்பட்டுள்ளது. இதே பகுதியில் முன்னதாக முன்னாள் ஜனாதிபதிகளின் மனைவிகளும் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் எலிசேயில் அவருக்கான அலுவலகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இருவரும், தற்போது 7 ஆம் வட்டாரத்தில் உள்ள Rue Cler பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
எலிசே மாளிகை 300 சதுர மீட்டர்கள் பரப்பளவு கொண்ட இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.