ஐரோப்பாவின் மறுமலர்ச்சி - இம்மானுவல் மக்ரோனைச் சந்தித்த இத்தாலிய பிரதமர் தெரிவிப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஐரோப்பாவின் மறுமலர்ச்சி  இம்மானுவல் மக்ரோனைச் சந்தித்த இத்தாலிய பிரதமர் தெரிவிப்பு!!

முன்னர் அறிவித்திருந்தது போல், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இத்தாலிய பிரதமர் Paolo Gentiloni, இம்மானுவல் மக்ரோனை எலிசேயில் சந்தித்தித்தார். 
 
மக்ரோன் பதவியேற்றதன் பின்னர், வெளிநாட்டு பிரதமர் ஒருவர் மக்ரோனை சந்திப்பது இதுவே முதன் முறையாகும். நேற்று மாலை இடமெற்ற இந்த சந்திப்பின் முடிவில் ஊடகங்களுக்கு இத்தாலிய பிரதமர் Paolo Gentiloni பேட்டியளித்தார். அதன்போது,  'பிரான்ஸ் மற்றும் இத்தாலி இணைந்து செயற்படுவது ஐரோப்பாவின் மறுமலர்ச்சி' என அவர் தெரிவித்தார். தவிரவும், ஜனாதிபதி தேர்தலில் இம்மானுவல் மக்ரோன் பெரு வெற்றி கண்டது பிரான்ஸ் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. மேலும் மொத்த ஐரோப்பாவுக்குமான நம்பிக்கை ஆகும் என Paolo Gentiloni மேலும் தெரிவித்தார். 
 
ஊடகவியலாளர்களுக்கான சந்திப்பை முடித்துக்கொண்டு, இம்மானுவல் மக்ரோன் , Paolo Gentiloni இருவரும் இரவு விருந்தில் கலந்துகொண்டனர்.

மூலக்கதை