‘இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தும்’: சாம்பியன்ஸ் டிராபி-யை வெல்வதுதான் இலக்கு: இன்சமாம் உல் ஹக் நம்பிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தும்’: சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதுதான் இலக்கு: இன்சமாம் உல் ஹக் நம்பிக்கை

கராச்சி: ஐசிசி ஒரு நாள் தரவரிசையில் டாப்-8 இடங்களில் உள்ள அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் ஜுன் 1ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் நடப்பு சாம்பியன் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான லீக் போட்டி ஜுன் 4ம் தேதி பர்மிங்ஹாமில் நடைபெறுகிறது.   இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவரும், முன்னாள் கேப்டனுமான இன்சமாம் உல் ஹக் கூறுகையில், ‘இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக மட்டும் நாங்கள் இங்கிலாந்துக்கு செல்லப்போவதில்லை.



எங்களது முதன்மையான இலக்கு சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றுவதுதான்’ என்றார். கடந்த 2004ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இன்சமாம் உல் ஹக் கேப்டனாக இருந்தபோது, இதே பர்மிங்ஹாம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் பாகிஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

தற்போதைய பாகிஸ்தான் அணி மீண்டும் அதை செய்யும் எனவும் இன்சமாம் உல் ஹக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை