வணிக வளாகத்தின் மீது விமானம் மோதி விபத்து: 5 பேர் பலி

தினகரன்  தினகரன்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் அருகே உள்ள எசன்டன் விமான நிலையத்தில் இருந்து கிங் தீவுக்கு செல்வதற்காக இரட்டை இன்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று நேற்று காலை புறப்பட்டுச் சென்றது. இதில் 5 பேர் பயணம் செய்தனர். விமானம் குறைந்த உயரத்தில் வேகமாக பறந்ததாக தெரிகிறது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், அருகே இருந்த வணிக வளாகம் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 5 பேரும் உயிரிழந்தனர்.

மூலக்கதை