வித்தியா குடும்பத்துக்கு வீடு கட்டிக்கொடுத்த இந்தியா!
புங்குடுதீவில் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் குடும்பத்தினருக்கு வவுனியாவில் நிர்மாணித்து கொடுக்கப்பட்ட வீடு இந்திய அரசின் நிதியுதவியினால் கட்டப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். இந்திய துணை உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வித்தியாவின் தாயாரை ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் சந்தித்திருந்த போது தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு கருதி வவுனியாவில் வீடொன்றை பெற்றுத்தருமாறு கோரியிருந்தார்.
இதனையடுத்து, வவுனியா, குருமன்காடு, சிங்கள பிரதேச செயலக வீதியில் வீடு அமைக்கப்பட்டு கடந்த 3ஆம் திகதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவினால் வித்தியா குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த வீட்டினை இலங்கை அரசாங்கமே நிர்மாணித்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
குறித்த வீட்டினை நிர்மாணிப்பதற்கான முழுமையாக நிதி உதவியினை இந்திய மத்தியரசு வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், கட்டுமானப் பணிகளுக்கான சரீர உதவிகளை இராணுவத்தினர் வழங்கியுள்ளனரே தவிர இலங்கை இராணுவத்தினரால் வீடு கட்டிக் கொடுக்கப்படவிலை எனயாழ். இந்திய துணை உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜன் உறுதிப்படுத்தியுள்ளார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
