தேர்தல் பறக்கும் படை சோதனையில் 5 மாநிலங்களில் இதுவரை ரூ.32 கோடி பறிமுதல்
புதுடெல்லி, மார்ச்.31-
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அசாம், கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 4 முதல் மே 16 வரை நடைபெறும் என தேர்தல் கமிஷன் கடந்த 4-ந்தேதி அறிவித்தது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட 5 மாநிலங்களிலும் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுத்து சட்டவிரோதமாக வாக்குகளை பெறுவதை கட்டுப்படுத்தவும் கருப்பு பண நடமாட்டத்தை கண்காணிக்கவும் மத்திய நிதி அமைச்சகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் மூலம் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் 5 மாநிலங்களிலும் பறக்கும் படையை தேர்தல் கமிஷன் அமைத்து, அதனை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
பறக்கும் படையினரின் அதிரடி சோதனையில் 5 மாநிலங்களில் இதுவரை ரூ.31 கோடியே 83 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.
இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் ரூ.15 கோடியே 19 லட்சம் சிக்கி உள்ளது. அதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்காள மாநிலத்தில் ரூ.5 கோடியே 64 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அசாமில் ரூ.5 கோடியே 43 லட்சமும், கேரளாவில் ரூ.5 கோடியே 27 லட்சமும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ரூ.30 லட்சமும் மொத்தம் ரூ.31 கோடியே 83 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
