சஸ்கட்சுவான் பாடசாலை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு பெருமளவான மக்கள் அஞ்சலி!
கனடா சஸ்கட்சுவான் பாடசாலை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் நினைவாக கடந்த (ஞாயிற்றுக்கிழமை) தேவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் லா லோச்சே பகுதியைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 600 பேர் வரை கலந்து கொண்டனர்.
சஸ்கட்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள லா லோச்சே பகுதி பாடசாலை ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை ஆயதங்களுடன் நுழைந்த சந்தேகநபர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி பிரயோகத்தில் பாடசாலை ஆசியர்கள் இருவர் கொல்லப்பட்டனர். அத்துடன் சகோதரர்கள் இருவரும் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் துன்பகரமானது என்பதுடன் மிகவும் ஆபத்தானது என தெரிவித்துள்ள கனேடிய அரசு சம்பவத்திற்கு கண்டனமும் வெளியிட்டுள்ளது. அத்துடன் சந்தேக நபரான 17 வயது சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.
இந்த நிலையி;ல் சம்பவத்தில் உயிரிழந்த நால்வரதும் நினைவாக தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் அப் பிரதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தமது அஞ்சலிகளை தெரிவித்துள்ளனர்.
இதன்போது வரிசைகளில் காத்திருந்த மக்கள் மெழுகுச் சுவாலைகள் ஏற்றி வைத்து கண்ணீர் மல்க அஞ்சலியை செலுத்தினர்.
170 total views, 170 views today




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
