சஸ்கட்சுவான் பாடசாலை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு பெருமளவான மக்கள் அஞ்சலி!
கனடா சஸ்கட்சுவான் பாடசாலை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் நினைவாக கடந்த (ஞாயிற்றுக்கிழமை) தேவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் லா லோச்சே பகுதியைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 600 பேர் வரை கலந்து கொண்டனர்.
சஸ்கட்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள லா லோச்சே பகுதி பாடசாலை ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை ஆயதங்களுடன் நுழைந்த சந்தேகநபர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி பிரயோகத்தில் பாடசாலை ஆசியர்கள் இருவர் கொல்லப்பட்டனர். அத்துடன் சகோதரர்கள் இருவரும் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் துன்பகரமானது என்பதுடன் மிகவும் ஆபத்தானது என தெரிவித்துள்ள கனேடிய அரசு சம்பவத்திற்கு கண்டனமும் வெளியிட்டுள்ளது. அத்துடன் சந்தேக நபரான 17 வயது சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.
இந்த நிலையி;ல் சம்பவத்தில் உயிரிழந்த நால்வரதும் நினைவாக தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் அப் பிரதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தமது அஞ்சலிகளை தெரிவித்துள்ளனர்.
இதன்போது வரிசைகளில் காத்திருந்த மக்கள் மெழுகுச் சுவாலைகள் ஏற்றி வைத்து கண்ணீர் மல்க அஞ்சலியை செலுத்தினர்.
170 total views, 170 views today




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
