ஊடகவியலாளர்கள் மீதான கடத்தல்- படுகொலைகள் பற்றி விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு தேவை என வலியுறுத்தி கையெழுத்து வேட்டை!
Wednesday, 27 January 2016 04:40
கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை மற்றும் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரிப்பதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவினை அரசாங்கம் உடனடியாக நிறுவ வேண்டும் என்று கோரி கொழும்பு கோட்டையில் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
“இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் எதிராக இடம்பெற்ற அனைத்துக் குற்றங்களையும் விசாரணை செய்ய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. என்றாலும், இதுவரை இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை. எனவே, இது தொடர்பில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று இந்த கையெழுத்து வேட்டையை ஒருங்கிணைத்துள்ள உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தக் கையெழுத்து வேட்டையில் சிவில் சமூகப் பிரதிநிதிகள், கல்வியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்களின் உறவினர்கள் மற்றும் நாட்டிலுள்ள பல்வேறு ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
