வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் நிகழ்வு
சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் வெள்ளை பிரம்பு தின நிகழ்வும் இசைத்தட்டு வெளியீட்டு நிகழ்வும் நாளை வியாழக்கிழமை (15.10.2015) கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் விழிப்புலனற்றோர் சங்க தலைவர் ச.ரூபராஜ் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக லண்டன் ஓம் சரவணபகவா சேவா அறக்கட்டளை நிதியத்தினால் வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்கு 100 வெள்ளைப்பிரம்பு 200 குடை என்பனவற்றோடு நிகழ்வில் கலந்து கொள்கின்றவர்களுக்கு மதியபோசன விருந்தும் வழங்கப்படவுள்ளது.
நிகழ்விற்கு அனுசரனை லண்டன் ஓம் சரவணபகவா சேவா அறக்கட்டளை நிதியம் ஒரு லட்சத்து எண்பதாயிரம் (180,000) நிதியினை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வட்டு இந்து வாலிபர் சங்கம் சார்பாக சங்க தலைவர் கு.பகீரதன், அராலி சரஸ்வதி மகா வித்தியாசாலை அதிபர் ந.சபாரட்ணசிங்கி சமூக சேவையாளர்களான சி.சபாநாதன் குகதாசன் (வட்டு இந்து வாலிபர் சங்க கொளும்புக்கிளை) ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந் நிகழ்வில் கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
புதுச்சேரியில் பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிப்பு
அனைவரும் நலமும், வளமும் பெற்று வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன் - எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து
அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, ஆரோக்கியம் நிரம்பிட வேண்டுகிறேன் - அண்ணாமலை பொங்கல் வாழ்த்து
கூடலூர்-ஓவேலி சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை
தன்பாத்- கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை மறுநாள் முதல் ரத்து
சென்னையில் டாஸ்மாக் கடைகள் இரு தினங்கள் மூடல்
