வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் நிகழ்வு
சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் வெள்ளை பிரம்பு தின நிகழ்வும் இசைத்தட்டு வெளியீட்டு நிகழ்வும் நாளை வியாழக்கிழமை (15.10.2015) கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் விழிப்புலனற்றோர் சங்க தலைவர் ச.ரூபராஜ் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக லண்டன் ஓம் சரவணபகவா சேவா அறக்கட்டளை நிதியத்தினால் வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்கு 100 வெள்ளைப்பிரம்பு 200 குடை என்பனவற்றோடு நிகழ்வில் கலந்து கொள்கின்றவர்களுக்கு மதியபோசன விருந்தும் வழங்கப்படவுள்ளது.
நிகழ்விற்கு அனுசரனை லண்டன் ஓம் சரவணபகவா சேவா அறக்கட்டளை நிதியம் ஒரு லட்சத்து எண்பதாயிரம் (180,000) நிதியினை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வட்டு இந்து வாலிபர் சங்கம் சார்பாக சங்க தலைவர் கு.பகீரதன், அராலி சரஸ்வதி மகா வித்தியாசாலை அதிபர் ந.சபாரட்ணசிங்கி சமூக சேவையாளர்களான சி.சபாநாதன் குகதாசன் (வட்டு இந்து வாலிபர் சங்க கொளும்புக்கிளை) ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந் நிகழ்வில் கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
