கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் கனகபுரா தாலுகா ரங்கப்பனதொட்டி கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் அருகில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் காட்டு யானைகள் பிளிறும் சத்தம் கேட்டது. இதனால் கிராம மக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள பாழடைந்த கிணற்றின் அருகே 2 யானைகள் நின்று கொண்டிருந்தன. அவற்றை விரட்டியடித்த கிராம மக்கள், கிணற்றுக்குள் பார்த்தனர். அப்போது அந்த கிணற்றுக்குள் குட்டி யானை ஒன்று பரிதவித்தப்படி கிடந்தது. இதுபற்றி உடனடியாக அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த வனத்துறையினர், குட்டி யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு காலை 7 மணிக்கு குட்டி யானையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். இதனை தூரத்தில் நின்று தாய் யானை பார்த்துக் கொண்டிருந்தது. இதையடுத்து வனத்துறையினர் மீட்கப்பட்ட குட்டி யானையை அதன் தாயிடம் சேர்த்தனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
