மூன்று இரவுகளாக ‘லிஃப்ட்டில்’ சிக்கி தவித்த கன்னியாஸ்திரிகள்: கடவுள் போல் உதவிக்கு வந்த நபர்
அயர்லாந்து மற்றும் நியூசிலாந்து நாடுகளை சேர்ந்த 58 மற்றும் 68 வயதான இரண்டு கன்னியாஸ்திரிகள் இத்தாலி தலைநகரான ரோமில் தங்கியுள்ளனர்.
Via Aurelia என்ற பகுதியில் கன்னியாஸ்திரி வீடு ஒன்றில் தங்கிருந்த அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அந்த வீட்டின் மேல் தளத்திலிருந்து கீழே செல்வதற்காக ‘லிஃப்ட்டில்’ ஏறியுள்ளனர்.
சிறிது தூரம் இறங்கிய அந்த லிஃப்ட் திடீரென பழுதாகி அங்கேயே நின்றுள்ளது. லிஃப்ட் பாதியில் நின்றதால் அதிர்ச்சி அடைந்த இரண்டு பேரும் பலத்த சத்தம் எழுப்பி உதவிக்கு அழைத்துள்ளனர்.
ஆனால், அப்போது அந்த வீட்டில் யாரும் இல்லாததால் இவர்களின் அபாய குரலை யாரும் கேட்கவில்லை.இருண்டு போன லிஃப்ட்டில் சிக்கி தவித்த இருவரும் தண்ணீர் இல்லாமல் போராடியுள்ளனர்.
கடந்த திங்கள் காலை வேளையில், அதாவது இரண்டு நாட்கள் மற்றும் மூன்று இரவுகள் கழித்து, அந்த வீட்டை சுத்தப்படுத்தி பெறுக்க வந்த வீட்டுப்பணியாளர் ஒருவர் வீட்டின் வெளிப்புற கதவின் காலிங்க் பெல்லை அடித்துள்ளார்.
ஆனால், உள்ளே இருந்து யாரும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர் பொலிசாருக்கு தகவல் அனுப்பினார்.
வீட்டிற்கு வந்த பொலிசார் மாற்று சாவியின் உதவியுடன் கதவை திறந்து உள்ளே நுழைந்துள்ளனர்.
ஆனால், வீட்டில் உள்ள அறைகளில் யாரும் இல்லாததால், ‘யாராவது இருக்கிறீர்களா?’ என குரல் எழுப்பியுள்ளனர்.
இந்த குரலை கேட்ட இரண்டு கன்னியாஸ்திரிகளும் பலவீனமான குரலில் ‘ஆமாம், இங்கே லிஃப்ட்டில் சிக்கிக்கொண்டுள்ளோம்’ என பதிலளித்துள்ளனர்.
உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்த பொலிசார், அவர்கள் வந்ததும் இருவரையும் பத்திரமாக வெளியே மீட்டனர்.
மூன்று இரவுகளாக தண்ணீர், உணவு எதுவும் இல்லாததால், சோர்ந்து போயிருந்த இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தங்களது வாழ்வு முடிவதற்குள் தேவ தூதுவராக அந்த பணியாளர் வந்து தங்களை காப்பாற்றியதாக இரண்டு பேரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
