நார்வே பிரதமருடன் அமைதி பேச்சுவார்த்தை பற்றி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆலோசனை
கீவ், ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி போர் மூண்டது. நேட்டோவில் சேரும் முடிவை உக்ரைன் கைவிட கோரியும், ராணுவ நடவடிக்கை என்ற பெயரிலும் ரஷியா போரில் ஈடுபட்டது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு, நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது. போரால் பெண்கள், குழந்தைகள் மற்றும் வீரர்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு அடைக்கலம் தேடி வேறு இடங்களுக்கு தப்பியோடி விட்டனர். இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டு உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதேபோன்று, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பலருடனும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில், நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் உடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமைதி பேச்சுவார்த்தை பற்றி ஆலோசனை நடத்தினார். ரஷிய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ராஜதந்திர முயற்சிகளை பற்றி அப்போது அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த சந்திப்பு பற்றி ஜெலன்ஸ்கி வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவு செய்தியில், நார்வே பிரதமர் உடன் நான் பேசினேன். சமீப நாட்களாக மேற்கொண்டு வரும் ராஜதந்திர பணி பற்றி நாங்கள் விரிவாக விவாதித்தோம். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள எங்களுடைய குழுவானது, அமெரிக்க தரப்புடன் இணைந்து பணியாற்றுகிறது. நாங்கள் விரைவாக முன்னேறி வருகிறோம். ஐரோப்பிய பிரதிநிதிகளையும் நாங்கள் அழைத்திருக்கிறோம் என பதிவிட்டு உள்ளார். இது ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தையாக இருந்தது. உண்மையில் போரை நிறுத்த வேண்டிய தேவையை ரஷியா உணர வேண்டும். ரஷிய தரப்பில் அது அரசியல் விளையாட்டாக இருந்து விட கூடாது. அதனை வைத்தே போர் முடிவுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.




ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
