ஈரோடு: நாகமலை குன்றில் வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள நாகமலை குன்று கடந்த மாதம் தமிழ்நாட்டின் 4-வது பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இங்கு நடந்த சமீபத்திய பறவைகள் ஆய்வில் கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியாவில் இருந்து வெகு தூரம் பயணித்து இங்கு வரும் பறவைகளின் வருகை அதிகரித்து உள்ளது கண்டறியப்பட்டது. குறிப்பாக நெடுந்தூரம் பறக்கும் பறவைகளான சாம்பல் கழுத்து கூம்பலகன், நீலப்பூங்குருவி, மரக்கதிர் குருவி, சேற்றுப் பூனைப்பருந்து, வெண்தொண்டை காட்டுக்கதிர்குருவி ஆகியவை கடந்த வாரம் நடந்த ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளன. இவைகளுடன் ராஜாளி கழுகு, வல்லூறு, பஞ்சுருட்டான், சில்லை, கொண்டலாத்தி, தவிட்டுப்புறா, உழவாரன், வெண்வயிற்று கரிச்சான் உள்பட 50-க்கும் மேற்பட்ட உள்ளூர் பறவைகளும் இங்கு வாழ்வது கண்டறியப்பட்டு உள்ளது. இதில் சாம்பல் கழுத்து கூம்பலகன், நீலப்பூங்குருவி, ராஜாளி கழுகு உள்ளிட்ட பறவைகள் பாறைப்பாங்கான பகுதிகளை சார்ந்து வாழ்வது நம்மை சுற்றியுள்ள குன்றுகளின் சூழல் முக்கியத்துவத்தை குறிக்கிறது. நாகமலை குன்றில் இதுவரை 136 வகையான பறவைகள், 138 வகையான தாவரங்கள், 106 வகையான பூச்சிகள், 23 வகையான எட்டுக்காலிகள், 17 வகையான ஊர்வனவைகள், 10 வகையான பாலூட்டிகள், 8 வகையான இதர பல்லுயிர்கள் என மொத்தம் 438 உயிரினங்கள் வாழ்வது கண்டறியப்பட்டு இருக்கிறது.




காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
பிலிப்பைன்சை தொடர்ந்து வியட்நாமை தாக்கிய புயல்; 11 பேர் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரிங்கு ஹூடா
