எறும்புகளை கண்டு பயம்; இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்த சோகம்
ஐதராபாத், தெலுங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தில் வசித்து வந்த 25 வயது பெண்ணுக்கு 2022-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவருக்கு 3 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு எறும்புகளே காரணம் என கூறப்படுகிறது. எறும்புகள் மீதுள்ள பயம் மிர்மிகோபோபியா என கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் கூறும்போது, சம்பவ பகுதியில் கிடைத்த தற்கொலை குறிப்பில், மன்னித்து விடுங்கள் ஸ்ரீ. இந்த எறும்புகளோடு என்னால் வாழ முடியாது. மகளை நன்றாக கவனித்து கொள்ளுங்கள் என தெரிவித்து உள்ளார். அவர் சம்பவத்தன்று, மகளை உறவினர் வீட்டில் விட்டிருக்கிறார். வீட்டை சுத்தம் செய்து விட்டு மகளை திரும்ப அழைத்து கொள்கிறேன் என கூறி சென்றார். காலையில் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய கணவர், பூட்டியிருந்த வீட்டு கதவை அண்டை வீட்டுக்காரர்களின் உதவியுடன் உடைத்து உள்ளே சென்று பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளார். அவருடைய மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். தொடர்ந்து போலீசார் கூறும்போது, அந்த பெண் தூய்மை செய்யும்போது எறும்புகளை பார்த்து இருப்பார். அந்த பயத்தில் தற்கொலை முடிவை எடுத்திருக்க கூடும் என போலீசார் கூறினர்.




காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
பிலிப்பைன்சை தொடர்ந்து வியட்நாமை தாக்கிய புயல்; 11 பேர் பலி
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரிங்கு ஹூடா
