பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்கா 263 ரன்களில் ஆல் அவுட்
பைசலாபாத், பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் பைசலாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷாகீன் அப்ரிடி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் - குயிண்டன் டி காக் களமிறங்கினர். பாகிஸ்தான் பந்துவீச்சை திறம்பட சமாளித்த இந்த ஜோடி தென் ஆப்பிரிக்க அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தது. இருவரும் அரைசதம் கடந்த நிலையில் பிரிட்டோரியஸ் 57 ரன்களிலும், டி காக் 63 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்கள் ஆடமிழந்ததும் தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் வரிசை தடுமாறியது. டோனி டி சோர்சி 18 ரன்களிலும், சினெதெம்பா 22 ரன்களிலும், டோனோவன் பெரீரா 3 ரன்களிலும், ஜார்ஜ் லிண்டே 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடிய கேப்டன் மேத்யூ பிரிட்ஸ்கே 42 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் கார்பின் போஷ் பொறுப்புடன் ஆட தென் ஆப்பிரிக்க அணி நல்ல நிலையை எட்டியது. போஷ் 41 ரன்களில் போல்டானார். 49.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்க அணி 263 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது, நசீம் ஷா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 264 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிதான் களமிறங்க உள்ளது.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
