மகளிர் உலகக்கோப்பை நிறைவு: புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்ட ஐ.சி.சி.
துபாய், நவிமும்பையில் நேற்று முன்தினம் இரவு நடந்த 13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல்முறையாக உலகக்கோப்பையை கையில் ஏந்தி வரலாறு படைத்தது. இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் வீராங்கனைகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார். மகளிர் உலகக்கோப்பையில் அதிக ரன் குவித்த தென் ஆப்பிரிக்க லாரா வால்வார்ட் 2 இடங்கள் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார். ஆஷ்லே கார்ட்னர் ஒரு இடம் சரிந்து 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அரையிறுதியில் அசத்திய இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9 இடங்கள் எகிறி 10-வது இடத்திற்கு வந்துள்ளார். பந்துவீச்சாளர்கள் வரிசையில் இங்கிலாந்தின் சோபி எக்லஸ்டோன் முதலிடத்தில் தொடருகிறார். தென் ஆப்பிரிக்காவின் மரிஜானே காப் 2 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் தீப்தி சர்மா 5-வது இடத்தில் தொடருகிறார். ஆல் ரவுண்டர்கள் வரிசையில் முதல் 3 இடங்களில் மாற்றமில்லை. ஆஷ்லே கார்னர், மரிஜானே காப், ஹேய்லி மேத்யூஸ் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் தொடருகின்றனர். இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
