கொழும்பில் அவசர கால பேரிடர் எச்சரிக்கை: உஷார் நிலையில் மீட்பு படையினர் - லங்காசிறி நியூஸ்
கொழும்பில் அவசர கால பேரிடர் நிலை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பில் அக்டோபர் 16ம் திகதி முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை அவசர கால பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் குறிப்பிட்ட நாட்களில் கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்று, இடி மற்றும் பயங்கர மின்னலுடனான மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அவசர கால நிலையில் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் விரைவாக மேற்கொள்ளப்படும் என்றும் கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது. அவசர கால பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டதை அடுத்து மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலின் படி, பல பகுதிகளுக்கு கனமழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தயார் நிலையில் இருக்கவும், அவசர தேவைகளுக்கு உடனடியாக கொழும்பு நகர சபையை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவசர கால உதவிக்கு, 011-2422222 மற்றும் 011-2686087 உள்ளிட்ட எண்களை தொடர்பு கொள்ளுமாறு கொழும்பு வாழ் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
