ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை
மும்பை,உலக அளவில் கடந்த ஒரு வாரமாகவே பங்குச்சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்து வந்தன. இது இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது.இஸ்ரேல் - ஹமாஸ் போர் காரணமாகவும் கச்சா எண்ணெய் வள நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாகவும் சர்வதேச அளவில் பங்குச்சந்தைகள் இறக்கத்துடன் காணப்பட்டன.இந்நிலையில், கடந்த 6 நாட்களாக சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.அதன்படி, வர்த்தக இறுதியில் நிப்டி 217 புள்ளிகள் ஏற்றம் கண்டு 25 ஆயிரத்து 13 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேபோல், 542 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 51 ஆயிரத்து 21 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.மேலும், 584 புள்ளிகள்வரை ஏற்றம் கண்ட சென்செக்ஸ் 81 ஆயிரத்து 634 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது. 231 புள்ளிகள்வரை உயர்ந்த பின் நிப்டி 23 ஆயிரத்து 452 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 219 புள்ளிகள்வரை உயர்ந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 874 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது.மேலும், 637 புள்ளிகள்வரை ஏற்றம் கண்ட பேங்க் எக்ஸ் 57 ஆயிரத்து 805 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. கடந்த 6 நாட்களாக சரிந்து வந்த இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
