இலங்கை ஜனாதிபதி தேர்தல் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு - லங்காசிறி நியூஸ்
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதி மற்றும் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் திகதி குறித்த வர்த்தமானி அறிவித்தலை இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடத்தப்படும் என்றும், வேட்புமனுக்கள் 2024 ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் பதவிக்காலம் நவம்பர் 17, 2024 இல் முடிவடைகிறது என்றும், ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு ஒரு மாதத்திற்குக் குறையாமலும், இரண்டு மாதங்களுக்கு முன்னரே பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம், 2024 ஆகஸ்டு 15 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தினமாகவும், இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தை மேற்படி தேர்தலுக்கான வேட்பாளர்களின் நியமன இடமாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு பிரகடனப்படுத்துகிறது.இதனடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கான திகதியாக 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி அறவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
