துபாய் நூலகத்துக்குத் தமிழக எழுத்தாளரின் நூல்கள் அன்பளிப்பு.

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

துபாய் நகரின் மிகவும் பிரமாண்ட நூலகமான முஹம்மத் பின் ராஷித் நூலகத்துக்கு நெல்லை ஏர்வாடியைச் சேர்ந்த எழுத்தாளர் சலாஹுதீன் எழுதிய தக்கலை பீரப்பாவின் பாடல்களுக்கான உரைநூல்களை நூலகத்தின் அதிகாரியான முஹம்மத் அம்மாரிடம் நூலாசிரியர் சார்பாக ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் வழங்கினார்.

 

இதனைப் பெற்றுக்கொண்ட நூலக அதிகாரி, "இந்தியக் குறிப்பாகத் தமிழக எழுத்தாளர்களின் நூல்கள் நூலகத்துக்கு அதிகமாகக் கிடைத்து வருகிறது. அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நூலகத்தை இந்தியச் சமூகத்தினர் அதிகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.

மூலக்கதை