AI தொழில்நுட்பத்தால் எந்தெந்த பணிகளுக்கு எல்லாம் பாதிப்பு இல்லை? இந்த பட்டியல்ல உங்கள் வேலை இருக்கா?

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான AI கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளிலும் நுழைந்துவிட்டது. இதன் வளர்ச்சியை நாம் ஊக்குவிக்கும் அதே வேளையில் மனிதர்களின் வேலைகளை இது பறித்துவிடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

 

அண்மைக் காலமாக ஐடி நிறுவனங்களில் நிகழ்ந்த பணி நீக்கங்களே இதற்கு உதாரணம். என்ன தான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தாலும் சில வேலைகளை அதனால் செய்ய முடியாது. நிச்சயம் அதற்கு மனித வளம் மட்டுமே தேவைப்படும். அத்தகைய வேலைகளின் பட்டியலைப் பார்க்கலாம்.

 

சுகாதாரத் துறை

 

மருத்துவர்கள், செவிலியர்கள், தெரபிஸ்ட் மற்றும் பிற சுகாதாரத் துறை சார்ந்த பணிகளை நிச்சயம் செயற்கை நுண்ணறிவால் செய்ய முடியாது. மனிதர்களிடம் பேசி பழகிப் புரிந்து கொண்டு அவர்களின் உணர்வுகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டிய துறை என்பதால் இத்தகைய பணிகளைச் செய்வது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை மிகச் சிக்கலான ஒன்று.

 

படைப்பாற்றல் கொண்ட வேலைகள்

 

படைப்பாற்றல் மற்றும் கற்பனைத் திறன் அதிகமாகத் தேவைப்படும் பணிகளைச் செயற்கை நுண்ணறிவால் திறம்பட எதிர்கொள்ள முடியாது. கலை சார்ந்த பணிகள், எழுத்தாளர், நடிகர், இசையமைப்பாளர் மற்றும் வடிவமைப்பாளர் ஆகிய வேலைகளுக்குப் படைப்பாற்றல் மிக முக்கியம். அது செயற்கை நுண்ணறிவுக்குக் கைகூடாது.

 

 மனநலம் சார்ந்த பணி

 

மனநல ஆலோசகர்கள், சமூக சேவைப் பணிகள் மற்றும் ஆலோசகர்கள் பணிகள் என்பது மனிதர்களின் மன நிலையைப் புரிந்து கொள்வது, உணர்வுகளைப் புரிந்து அதற்கேற்ப செயல்படுவது ஆகியவற்றை உள்ளடக்கியது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் தற்போதைக்கு இத்தகைய புரிதல்களை ஏற்றுக் கொண்டு அனுதாபம் உள்ளிட்டவற்றோடு செயல்பட முடியவில்லை.

 

மனித வளத்துறை

 

HR பணிகள் ஆட்சேர்ப்பு, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது மற்றும் பணியாளர்கள் நல வாழ்வு உள்ளிட்ட பலவிதமான தனிப்பட்ட மற்றும் மக்கள் சார்ந்த பணிகளைக் கையாளக்கூடிய ஒரு பணி இதற்கு உணர்ச்சி நுண்ணறிவு மிக அவசியம். செயற்கை நுண்ணறிவுக்கு அந்தத் திறன் இல்லை என்பதால் மனித வளத்துறை சார்ந்த பணிகளை அவற்றால் மேற்கொள்ள முடியாது.

 

திறன் வாய்ந்த பணிகள்

 

எலக்ட்ரீசியன், பிளம்பிங், கார்பெண்டர்ஸ் மற்றும் மெக்கானிக் பணிகள் அனுபவம் சார்ந்த மற்றும் திறன் சார்ந்த பணிகள். நிஜ உலகில் பிரச்சினையைப் புரிந்து அதற்கு ஏற்ப செய்ய வேண்டிய பணிகள் என்பதால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் நிச்சயம் இதனைச் செய்ய முடியாது.

 

ஆசிரியர் மற்றும் வழிகாட்டி பணிகள்

 

கல்வியாளர்கள் குறிப்பாக வழிகாட்டுதல் பணிகளில் ஈடுபடுவோர் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட கற்றலை வலியுறுத்தும் வேலைகளைச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் மேற்கொள்ள முடியாது. ஏனெனில் இதில் மனிதத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அவர்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டிய பணி இது.

 

அவசரச் சேவைகள்

 

 தீயணைப்பு வீரர்கள், மருத்துவ உதவியாளர்கள், காவல்துறை பணி போன்ற அவசரநிலை பணிகளில் விரைவான சிந்தனையும் தகவமைப்புத் தன்மையும் தேவை. மாறுபட்ட மற்றும் கணிக்க முடியாத சூழல்களில் பணியாற்றக்கூடிய திறன் தேவை இது தற்போதைக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் மேற்கொள்ள முடியாத ஒரு பணி.

 

ஒரே மாதிரியான பணிகளை , மனிதர்கள் அளித்த உள்ளீடுகளுக்கு ஏற்பவும் ஏற்கனவே நடந்த நிகழ்வுகளைக் கொண்டும் தான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் செயல்பட முடியும். உணர்வுகள் சார்ந்த, சூழல் சார்ந்த முடிவெடுக்க வேண்டிய பணிகளை மனிதர்களைப் போலச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கையாள்வது என்பது சாத்தியமில்லை.

 

நன்றி - Good returns tamil

மூலக்கதை