கதை நாயகியாக நடிக்கும் ஈஸ்வரி ராவ்
'கவிதை பாடும் அலைகள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஈஸ்வரி ராவ். விஜய்யின் 'நாளைய தீர்ப்பு' படத்தில் நடித்தார். அதன் பிறகு பல படங்களில் நடித்த அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு 'காலா' படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தார். தொடர்ந்து 'அழியாத கோலங்கள்' இரண்டாம் பாகத்தில் நடித்தார். தற்போது அவர் கதையின் நாயகியாக நடித்துள்ள தமிழ் படம் 'ஆலகாலம்'.
ஸ்ரீஜெய் புரொடக்ஷன் தயாரிப்பில், ஜெயகி இயக்கத்தில் உருவாகி உள்ளது. ஜெயகி, சாந்தினி நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். தீபா, தங்கதுரை, சிசர் மனோகர், கோதண்டம் உள்பட பலர் நடித்துள்ளனர். சத்யராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ஜெயகி கூறும்போது “சமூகத்தின் மிகப்பெரும் பிரச்சனைகளையும், உண்மைச் சம்பவங்களையும் மையப்படுத்தி, மிகவும் எதார்த்தமாக உருவாகியுள்ளது. ஒரு தாயின் கனவை நனவாக்க முயலும் இளைஞனின் வாழ்க்கை சமூகத்தால் சீரழிய அவனை மீட்க, அவனது தாயும் காதலியும் போராடுகிறார்கள். அந்த இளைஞன் மீண்டானா? வாழ்வில் ஜெயித்தானா? தாயின் கனவு நிறைவேறியதா என்பதே படம். அந்த தாயாக முதன்மை கேரக்டரில் ஈஸ்வரிராவ் நடித்துள்ளார்” என்றார்.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
