தமிழகத்தில் வீடுதோறும் குடிநீர் வசதி; மத்திய அரசு நிதியில் வாரியம் ஜரூர்

  தினமலர்
தமிழகத்தில் வீடுதோறும் குடிநீர் வசதி; மத்திய அரசு நிதியில் வாரியம் ஜரூர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை:மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 11,866 குடியிருப்புகளில் வசிக்கும், 1.03 கோடி மக்களுக்கு, தினமும் 68.27 கோடி லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் பல்வேறு குடிநீர் திட்டப் பணிகளை, தமிழக குடிநீர் வடிகால் வாரிAயம், முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறது.

எந்தெந்த திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி தருகிறது என்பதை அறிந்து, அதை பெற்று, கிராமப் பகுதிகளில் வீடுகளுக்கு நேரடி குடிநீர் வசதி செய்து தரப்படுகிறது.

திட்ட பணிகள்


அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக, வீடுகள்தோறும் குடிநீர் வழங்கும் திட்டப் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

அந்த வகையில், 7 நகராட்சிகள், 20 பேரூராட்சிகள் மற்றும் 11,866 ஊரக குடியிருப்புகளில் உள்ள 1.03 கோடி மக்களுக்கு, தினசரி 68.27 கோடி லிட்டர் குடிநீர் விரைவில் கிடைக்கும்.

இதற்காக, மொத்தம் 40 குடிநீர் திட்ட பணிகள், 14,784 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகின்றன. இதில், மத்திய அரசின் ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ், 14,668.06 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தற்போது, 7 திட்டங்கள்,40.49 கோடி ரூபாய் மதிப்பில், 93,000 மக்கள் பயன்பெறும் வகையில் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

இதுகுறித்து, தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

இந்த மாவட்டங்களில், இதுவரை குடிநீர் தட்டுப்பாடு என்பது பெரிய பிரச்னையாக இருந்து வந்தது. தற்போதுதான், அதற்கு தீர்வு கிடைக்கும் வகையில், இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பராமரிப்பில் உள்ள, 56 கூட்டுக் குடிநீர் திட்டங்கள், மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன.

195 கோடி லிட்டர் குடிநீர்


இதன் வாயிலாக, வீடுகளுக்கு குழாய் இணைப்புகளின் வாயிலாக, தினசரி ஒரு நபருக்கு, 55 லிட்டர் குடிநீர் வழங்கப்பட உள்ளது; இதற்கு, 1,658.31 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.

இதில், 136.32 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

அதேபோல், 2021ம் ஆண்டில் இருந்து இதுவரை, 2 மாநகராட்சிகள், 11 நகராட்சிகள், 38 பேரூராட்சிகள் மற்றும் 5,044 ஊரக குடியிருப்புகளில் உள்ள, 59.91 லட்சம் மக்களுக்கு, குடிநீர் இணைப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், 4,778 கோடி ரூபாய் மதிப்பில், 35 கோடி லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர், மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், வாரியத்தின் பராமரிப்பில் உள்ள, 544 கூட்டு குடிநீர் திட்டங்களின் வாயிலாக, 12 மாநகராட்சிகள், 65 நகராட்சிகள், 346 பேரூராட்சிகள் மற்றும் 52,361 ஊரக குடியிருப்புகளில் உள்ள, 4.53 கோடி மக்கள் பயன் பெறும் வகையில், 195 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

7 திட்டங்கள் எங்கே?


மாவட்டம் குடிருப்புகள்

ராமநாதபுரம் 2,306

திண்டுக்கல் 1,422

நாகை 980

திருவாரூர் 667

மதுரை 1,191

விருதுநகர் 1,286

நாமக்கல் 523

சென்னை:மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 11,866 குடியிருப்புகளில் வசிக்கும், 1.03 கோடி மக்களுக்கு, தினமும் 68.27 கோடி லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு

மூலக்கதை