அனந்த்நாக் மாவட்டத்தில் 5வது நாளாக வேட்டை
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில், பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை ஐந்தாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் சமீபத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், நம் ராணுவ அதிகாரிகள் இருவர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து, பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கடோல் வனப்பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை பிடிக்கும் பணி, கடந்த நான்கு நாட்களாக நடந்து வந்த நிலையில், ஐந்தாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
இந்த வனப்பகுதியில் குகை போன்ற மறைவிடங்கள் இருப்பது தெரிய வந்ததை அடுத்து, ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் வாயிலாக தேடுதல் பணியை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டனர்.
பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்களில், கையெறி குண்டுகளை பாதுகாப்புப் படையினர் வீசினர். இதில், ஒரு பயங்கரவாதி காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்குள் பயங்கரவாதிகள் பதுங்காமலிருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போஷ் க்ரீரி பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில், பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை ஐந்தாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில்




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
