பாகிஸ்தானியரை திருமணம் செய்துகொண்ட இந்திய பெண்: பாகிஸ்தானுக்குள் நுழைய அனுமதி மறுப்பு
லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் மீரட் சர்தானா பகுதியைச் சேர்ந்தவர் சனா. இவர் பாகிஸ்தானை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் அவர், தனது இரண்டு குழந்தைகளுடன் 45 நாள் விசாவில் இந்தியா வந்திருந்தார். அவரது விசா காலாவதியாகிவிட்டதால் அவரை இந்தியாவில் இருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் கடந்த 24-ந் தேதி வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்குள் நுழைய முயன்றனர். அப்போது எல்லையில் இருந்த பாகிஸ்தான் அதிகாரிகள் அவர்களை பாகிஸ்தானுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. அவர்களிடம் இந்திய பாஸ்போர்ட் இருந்ததால் பாகிஸ்தானுக்கு திரும்ப அனுமதி மறுக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இருப்பினும், அவரது குழந்தைகள் பாகிஸ்தான் குடிமக்கள் என்பதால் எல்லையைக் கடக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் சனா தனது குழந்தைகளை தனியாக அனுப்பமறுத்துவிட்டார்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
