நாங்கள் நல்ல தொடக்கத்தை கொடுத்தோம்; டெல்லியை ஸ்டார்க் வெற்றி பெற வைத்தார் - சஞ்சு சாம்சன்
புதுடெல்லி,18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 31 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 32-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 188 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான், 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்தது. இதனால் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் போடப்பட்டது. சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது. போடிக்கு பிறகு பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், "நாங்கள் நன்றாக பந்து வீசினோம். பவர் பிளேவிலும் நல்ல தொடக்கத்தை கொடுத்தோம். எங்கள் அணி வீரர்கள் களத்தில் சிறப்பாக செயல்பட்டார்கள்.இந்த இலக்கு எட்டக்கூடிய இலக்குதான். அந்த அளவுக்கு எங்கள் அணியின் பலமான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ஆனால் டெல்லி அணிக்கு 20-வது ஓவரில் மிட்செல் ஸ்டார்க்தான் வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறார். உலகின் மிகச்சிறந்த பவுலர் என்று மீண்டும் ஸ்டார்க் நிரூபித்து இருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று தெரிவித்தார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
