15 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர் கைது
மும்பை,மராட்டியம் மாநிலம் நவிமும்பை பன்வெல் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த 3-ந்தேதி பள்ளிக்கு புறப்பட்டார். அந்த சிறுமியை பக்கத்து வீட்டை சேர்ந்த வேன் டிரைவர் வாகனத்தில் ஏறுமாறும், பள்ளியில் கொண்டு போய் விடுவதாகவும் தெரிவித்தார்.இதனை நம்பிய சிறுமி வேனில் ஏறினார். ஆனால் வேனை பள்ளிக்கு ஓட்டிச்செல்லாமல் சிஞ்ச்வாலி சிவாரா பகுதிக்கு டிரைவர் ஓட்டி சென்றார். அங்கு மறைவான இடத்தில் வேனை நிறுத்தி சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.பாதிக்கப்பட்ட சிறுமி வீடு திரும்பியதும் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்தப்புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பள்ளி வேன் டிரைவரை பிடித்து கைது செய்தனர். டிரைவரை சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி 18-ந்தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
