தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதை தடுக்க வேண்டும் - இந்திய அரசுக்கு இலங்கை கோரிக்கை - லங்காசிறி நியூஸ்
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதை இந்திய அரசு தடுக்க வேண்டும் என இலங்கை அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி, இலங்கை கடற்படை அவர்களை கைது செய்வது நீண்டகால பிரச்சனையாக இருந்து வருகிறது. இவ்வாறு மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம், மீனவர்களை மீட்குமாறு தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வந்தாலும், இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை. இந்த மீனவர் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காண வேண்டுமென இலங்கை போக்குவரத்து, துறைமுகங்கள் துறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய அவர், "போர் காலத்தில் இலங்கைக்கு இந்தியா பெரும் அளவுக்கு உதவி செய்திருப்பது நம் அனைவருக்கும் தெரியும். அதற்கு நாம் நன்றியுடையவர்களாக இருப்போம். இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதை மத்திய அரசும் தமிழக அரசும் தடுக்க வேண்டும். இலங்கையின் வடக்கு பகுதி மக்கள் மீன் பிடித்தலையே ஒரே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இந்திய அரசு, இலங்கை அரசாங்கத்திற்கு எவ்வளவு உதவி செய்திருந்தாலும், மீனவர்கள் பிரச்சினையில் வடக்கு பகுதி மக்களுக்கு உதவத் தவறினால், அது அவர்களின் மற்ற அனைத்து உதவிகளும் உண்மையானவையா என்ற கேள்வியை எழுப்பும்" என பேசினார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த மாதம் இலங்கைக்கு வர உள்ள நிலையில், அமைச்சரின் இந்த கருத்துகள் வெளியாகியுள்ளது. "இந்திய பிரதமர் மோடி இலங்கை வரும் போது இந்திய மீனவர்கள் சட்டத்தை மீறி இலங்கை எல்லைக்குள் மீன் பிடிப்பது குறித்து பேச வேண்டும்," என எதிர்க்கட்சி எம்.பி மனோ கணேசன் கோரிக்கை வைத்துள்ளார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
