இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை சந்தித்து பேசிய யாழ்ப்பாணம் எம்பி - லங்காசிறி நியூஸ்
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை யாழ்ப்பாணம் எம்பி சிவஞானம் ஸ்ரீதரன் சந்தித்து பேசியுள்ளார். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை தமிழரசுக் கட்சியை சேர்ந்த யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் சந்தித்து பேசியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் முதல் இலங்கை கடற்படையினரால் 18 படகுகள் சிறைபிடிக்கப்பட்டு 131 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 38 மீனவர்கள் தண்டனை பெறப்பட்டு சிறையில் உள்ளனர். மேலும், 20 மீனவர்கள் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளனர். இதனிடையே, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் வருகையை கட்டுப்படுத்த வேண்டும் என்று இலங்கை மீனவர்களும் போராட்டம் செய்கின்றனர். இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை இலங்கைத் தமிழரசுக் கட்சியை சேர்ந்த யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் சந்தித்து பேசினார். பின்னர் பேட்டி அளித்த அவர், "விரைவில் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக மீனவர்கள் கேட்டுக் கொண்டனர். மேலும், இப்பகுதியில் மீண்டும் மீன் பிடிக்க மாட்டோம் என்று கூறினர். குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச அனுமதி தருமாறு கேட்டுக் கொண்டனர்" என்றார்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
