கிருஷ்ணகிரியில் காட்டு யானை தாக்கி விவசாயி பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்ேகாட்டை அருகே அஞ்செட்டி தாலுகாவிற்கு உட்பட்ட ஜேசுராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மதலைமுத்து (வயது 65), விவசாயி. இவர் மாடுகள் வளர்த்து பிழைப்பு நடத்தி வந்தார். நேற்று முன்தினம் காலையில் அவர் வீட்டில் இருந்து 7 மாடுகளை அவிழ்த்து மேய்ச்சலுக்காக அருகில் உள்ள ஏழு சுத்துக்கோட்டை வனப்பகுதிக்கு ஓட்டி சென்றார். ஆனால் அவர் மாலையில் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் உறவினர்கள் தேடி சென்றனர். அப்போது ஒரு மாடு மட்டும் வீட்டிற்கு திரும்பி வந்தது. மற்ற 6 மாடுகள் திரும்பி வரவில்லை. மேலும் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற விவசாயி மதலைமுத்து இரவு வரை வீடு திரும்பவில்லை. நீண்ட நேரம் தேடியும் அவர் என்ன ஆனார்? என்ற தகவல் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் நேற்று காலை ஏழு சுத்துக்கோட்டை வனப்பகுதிக்குள் சென்று தேடி பார்த்தனர். அப்போது அங்கு காட்டு யானை தாக்கி கால் துண்டாகி உடல் சிதைந்த நிலையில் மதலைமுத்து இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அஞ்செட்டி வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
