தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.280 உயர்வு
சென்னை, தங்கம் விலை கடந்த 11-ந் தேதி ஒரு பவுன் ரூ.64 ஆயிரத்து 480-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சமாக பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மறுநாளே பவுனுக்கு ரூ.960 சரிந்து சற்று ஆறுதல் அளித்தது. அதன் பிறகு 13, 14-ந் தேதிகளில் விலை மீண்டும் உயர்ந்து இருந்தது. அதனைத் தொடர்ந்து 15-ந் தேதி பவுனுக்கு ரூ.800 குறைந்து, 17-ந் தேதியில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இப்படியாக ஏற்ற, இறக்கத்துடனேயே பயணித்து வரும் தங்கம் விலை, நேற்றும் அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.65-ம், பவுனுக்கு ரூ.520-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 35-க்கும், ஒரு பவுன் ரூ.64 ஆயிரத்து 280-க்கும் விற்பனையானது . இதன் மூலம் தங்கம் விலை 2-வது முறையாக ரூ.64 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் அதிகரித்து புதிய உச்சம் தொட்டுள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.280 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ.64,560 ஆக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.8,070க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையின் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.109 க்கு விற்பனையாகிறது.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
