இலங்கையில் தேசிய வரிக்கொள்கை, புதிய சுங்கச் சட்டம் அறிமுகம் - லங்காசிறி நியூஸ்
இலங்கை அரசாங்கம் தேசிய வரிக்கொள்கை மற்றும் புதிய சுங்கச் சட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.இலங்கையின் ஏற்றுமதி துறையில் வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் தேசிய வரிக்கொள்கை மற்றும் புதிய சுங்கச் சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க 2025 ஆண்டுக்கான அரச பட்ஜெட் உரையை நாடாளுமன்றத்தில் நிகழ்த்தியபோது இதனை அறிவித்தார். இலங்கையின் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி திறனை பாரிய அளவில் மேம்படுத்துவதற்காக, 2025- 2029 காலப்பகுதிக்கான தேசிய ஏற்றுமதி மேபாட்டு திட்டத்தை அரசாங்கம் தயாரிக்கும் என்று அவர் தெரிவித்தார். மேலும், உயர்தர மூலப்பொருட்களை ஏற்றுமதியாளர்கள் எளிதில் பெறுவதற்காக, தேசிய வரிக் கொள்கையின் அடிப்படையில் எளிய, வெளிப்படையான மற்றும் கணிக்கக்கூடிய கட்டண கட்டமைப்பு உருவாக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார். இந்த ஆண்டு 19 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்ட இலங்கை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த முயற்சிகள் இலங்கையின் ஏற்றுமதி துறையை பலப்படுத்தும் முக்கியமான நடவடிக்கைகளாகக் கருதப்படுகின்றன. Sri Lanka National Tariff Policy, Sri Lanka new Customs Act, Sri Lankan President Anura Kumara Dissanayake




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
