இருளில் மூழ்கிய முழு இலங்கை - மின்தடைக்கு ஒரு குரங்கு தான் காரணமா? - லங்காசிறி நியூஸ்
இலங்கை முழுவதும் நேற்று திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து முழு இலங்கையும் இருளில் முழ்கின. அதன்படி மின்சார விநியோகத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார வாரியம் (CEB) தெரிவித்துள்ளது. பாணந்துறை மின் இணைப்பு துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட 'அவசரகால சூழ்நிலை' காரணமாக தீவு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்தது. அதையடுத்து குரங்கின் செயற்பாட்டாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை மின் இணைப்பு துணை மின்நிலையத்தில் உள்ள மின் கம்பிகளில் குரங்கு ஒன்று விழுந்ததால் தீவு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.அதையடுத்து பல இடங்களில் மின்சார தடை சீரமைக்கப்பட்டது. கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனை, அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையம், பியகம மற்றும் சப்புகஸ்கந்த பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களுக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார். நாடு முழுவதும் தற்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டு காரணமாக நீர் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (NWSDB) தெரிவித்தது. எனவே மின்சாரம் மீண்டும் கிடைக்கும் வரை, தற்போதைய நிலைமை காரணமாக, தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டது. மேலும் அதையடுத்து சில இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டு, இரவு 8 மணியளவில் மீண்டும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
