‘தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்’; குற்றச்சாட்டுகளை ஏற்ற ‘ஊபர்’
புதுடில்லி–பிரபல ‘கால் டாக்சி’ சேவை நிறுவனமான ‘ஊபர்’ மீது, ஊடகங்கள் கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் முன்வைத்ததை அடுத்து, அந்நிறுவனம், கடந்த கால தவறுகளை ஒப்புக்கொள்வதாகவும், ஆனால் இப்போது வேறுமாதிரியான நிறுவனமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
‘சர்வதேச புலானாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு’ ஊபர் நிறுவனத்தின் கடந்த கால முறைகேடுகள் பலவற்றை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி உள்ளன. குறிப்பாக, கட்டுபாட்டு அமைப்புகளின் நடவடிக்கைகளை தவிர்க்கும் வகையில், திருட்டுத்தனமான தொழில்நுட்பத்தை இந்நிறுவனம் பயன்படுத்தி பலனடைந்துள்ளது என்றும்; சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, இதை எளிதாக செய்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.இதற்கு பதிலளித்துஉள்ளது ஊபர் நிறுவனம். அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: கடந்த கால நடவடிக்கைகளுக்கு நாங்கள் சாக்குப்போக்கு சொல்ல விரும்பவில்லை; சொல்லவும் மாட்டோம்.
ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் நாங்கள் எவ்வாறு செயல்பட்டோம் என்பதை வைத்து, எங்களை மதிப்பிடுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இந்த தவறுகளுக்கு, பல மூத்த அதிகாரிகள் நீக்கப்பட்டனர். தாரா கோஸ்ரோஷாஹி 2017ல் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பிறகு, இப்போது இது வித்தியாசமான நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்துஉள்ளது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
