ஆப்கனில் பயங்கர நிலநடுக்கம்: 1,000க்கும் அதிகமானோர் உயிரிழப்பு

தினமலர்  தினமலர்
ஆப்கனில் பயங்கர நிலநடுக்கம்: 1,000க்கும் அதிகமானோர் உயிரிழப்பு

காபூல்:ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி, 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 1,500க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.
மலைப்பகுதியில் அமைந்துள்ள ஏராளமான கட்டடங்கள் சரிந்து, இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப் படுகிறது.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சண்டை நடந்து வந்தது.

பெருத்த சேதம்
அரசு படைகளுக்கு ஆதரவு அளித்து வந்த அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு திரும்ப பெறப்பட்டன. இதையடுத்து தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அப்போது இருந்தே ஆப்கனின் சமூக, பொருளாதார நிலை வீழ்ச்சி அடைய துவங்கியது.இந்நிலையில், கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
மலைப்பகுதிகளில் உள்ள கட்டடங்கள் தரமற்று இருந்த காரணத்தினால், சேதங்களின் அளவு மிக கடுமையாக இருந்தது. பாகிஸ்தான் எல்லை யில் அமைந்துள்ள கோஸ்ட் நகரில் இருந்து தென்மேற்கு பகுதியில் 50 கி.மீ., தொலைவில் உள்ள பாக்டிகா மாகாணத்தில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம்
ஆப்கனில் இருந்து 375 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள பாக்.,கின் இஸ்லாமாபாத் நகரம் வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இடிபாடுகளில் சிக்கி, 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 1,500க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். ஆப்கனில் முகாமிட்டு இருந்த சர்வதேச அமைப்புகள் தலிபான் ஆட்சி அமைந்த பின் நாட்டைவிட்டு வெளியேறி விட்டன.
எனவே, இந்த பேரிடர் நேரத்தில் விரைந்து உதவிடவும், மீட்பு பணியில் ஈடுபடவும் ஆட்கள் இன்றி தலிபான் அரசு தவித்து வருகிறது. இன்றும் அங்கு முகாமிட்டு இருக்கும் சில சர்வதேச அமைப்புகள் மீட்பு பணிகளில் உதவி வருகின்றன. மீட்பு பணிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக, பிரதமர் முகமது ஹசன் அக்குந்த் அவசர ஆலோசனை கூட்டத்தை தலைநகர் காபூலில் கூட்டினார்.
ஆப்கனுக்கு தேவையான உதவிகளை செய்வதாக பாக்., பிரதமர் ெஷபாஸ் ஷெரீப் உறுதி அளித்துள்ளார். ஆப்கனில் ஏற்பட்ட நிலநடுக்கம் பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட பகுதிகளில், 500 கி.மீ., வரை உணரப்பட்டதாக, ஐரோப்பிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

நம் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி நேற்று கூறியதாவது:ஆப்கன் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த கடுமையான நேரத்தில் ஆப்கன் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும், உறுதுணையாக நிற்கவும் இந்திய அரசு உறுதி அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.



இதற்கு முன் ஆப்கன், பாக்., இந்தியாவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய நிலநடுக்கங்கள்:
டிச., 28, 1974: வடக்கு பாகிஸ்தானில் 6.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 5,300 பேர் பலி.
அக்., 20, 1991: உத்தரகண்ட்டில் 7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 2,000 பேர் பலி.
1993 செப்., 29: மஹாராஷ்டிராவில் 6.2 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 9,748 பேர் பலி.
பிப்., 4, 1998: ஆப்கனின் தக்ஹார் பகுதியில் 5.9 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 2,300 பேர் பலி.
மே 30, 1998: ஆப்கனின் தக்ஹார் பகுதியில் 6.6 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 4,000 பேர் பலி.
ஜன., 26, 2001: குஜராத்தில் 7.7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 20 ஆயிரம் பேர் பலி.
மார்ச் 25, 2002: ஆப்கனின் இந்து குஷ் பகுதியில் 6.1 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 1,000 பேர் பலி.
அக்., 8, 2005: பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாலகோடில் 7.6 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 75 ஆயிரம் பேர் பலி.
ஜூன் 22, 2022: ஆப்கனின் பாக்டிகா மாகாணத்தில் கோஸ்ட் அருகே 6.1 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 1,000 பேர் பலி.





காபூல்:ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி, 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 1,500க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை