ஒன்றிய நிர்வாக தீர்ப்பாயத்தில் 1350 வழக்குகள் தேக்கம் எம்பிக்கள் குழு தகவல்
புதுடெல்லி: ஒன்றிய நிர்வாக தீர்ப்பாயத்தில் 1,350க்கும் மேற்பட்ட வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேங்கி உள்ளன என்றும் இந்த வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என நாடாளுமன்ற எம்பிக்கள் குழு வலியுறுத்தியுள்ளது. ஒன்றிய அரசு ஊழியர்களின் பணி சார்ந்த விவகாரங்கள் குறித்த வழக்குகளை ஒன்றிய நிர்வாக தீர்ப்பாயம்(சிஏடி) விசாரித்து தீர்ப்பளிக்கிறது. இந்நிலையில், பணியாளர் நலன்,பொதுமக்கள் குறைகள் மற்றும் சட்டம்,நீதித்துறை தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில், கடந்த டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி நிர்வாக தீர்ப்பாயத்தின் பல்வேறு பெஞ்ச்களில் 80,545 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில்,16,661 வழக்குகள் ஒரு வருடம் வரையும், 46,534 வழக்குகள் 5 ஆண்டுகள்,16,000 வழக்குகள் 10 ஆண்டுகள்,1,350 வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேங்கி உள்ளன. ஒன்றிய நிர்வாக தீர்ப்பாயத்தின் விதிகளின்படி மனுக்களை 6 மாதத்தில் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இதில், பெரும்பாலான வழக்குகள் பென்ஷன் மற்றும் மூத்த குடிமக்கள் தொடர்பானவை. எனவே,10 வருடங்களுக்கும் மேலான வழக்குகளை முன்னுரிமை அடிப்படையில் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும். வழக்குகள் தேக்கமடைவதற்கு போதுமான உறுப்பினர்கள் இல்லாததே காரணம். நிர்வாக தீர்ப்பாயத்தில் நீதிபதிகள்,நிர்வாக அதிகாரிகள் உட்பட 70 பதவிகள் உள்ளன. இதில்,17 இடங்கள் காலியாக உள்ளன என கூறப்பட்டுள்ளது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
