வட மாநிலங்களில் பருவம் தவறிய மழையால் கோதுமை பயிர்கள் கடும் சேதம்
புதுடெல்லி: பருவம் தவறிய மழை, ஆலங்கட்டி மழையால் வட மாநிலங்களில் கோதுமை பயிர்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. உலகில் கோதுமை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்தாண்டு இந்தியாவில் மொத்தம் 3.4 கோடி ஹெக்டேரில் கோதுமை பயிரிடப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உபி உள்பட 3 மாநிலங்களில் மொத்தம் 5.23 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள கோதுமை பயிர்கள் பருவம் தவறிய மழையால் சேதமடைந்துள்ளன.இது குறித்து ஒன்றிய வேளாண்துறை செயலாளர் மனோஜ் கூறுகையில்,‘‘ கோதுமை அறுவடைக்கு தயாராகி வருகிறது. ஆனால், கடந்த சில வாரங்களாக சில இடங்களில் மழை, ஆலங்கட்டி மழை பெய்தது. மேலும் சூறைக்காற்றும் வீசியதால் கோதுமை விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காலம் தவறிய மழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்பு குறித்து மாநில அரசுகளுடன் சேர்ந்து ஒன்றிய அரசு ஆய்வு நடத்தும்’’ என்றார். ராஜஸ்தானில், 3.88 லட்சம் ஹெக்டேர் கோதுமை பயிர்கள் சேதமடைந்துள்ளன. மத்திய பிரதேசத்தில் ஒரு லட்சம் ஹெக்டேரும், உபியில் 35 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களும் சேதமடைந்துள்ளன. பஞ்சாப்பில் கோதுமை பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்த அதிகாரிகளுக்கு முதல்வர் பகவந்த் சிங் மான் உத்தரவிட்டுள்ளார். அதே போல், பயிர் பாதிப்பு குறித்து ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும் என அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
