குனோ தேசிய பூங்காவிலிருந்து வௌியேறிய சிவிங்கி புலியால் மக்கள் அச்சம்
ஷியோபூர்: இந்தியாவில் அழிந்து விட்ட இனமாக கருதப்பட்ட சிவிங்கி புலி இனத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஆப்பிரிக்காவின் நமீபியாவிலிருந்து 5 பெண், 3 ஆண் என மொத்தம் 8 சிவிங்கி புலிகள் இந்தியா அழைத்து வரப்பட்டன. அவை மத்தியபிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் சாஷா என்ற பெண் சிவிங்கி புலி அண்மையில் உயிரிழந்து விட்டது. இந்நிலையில், ஓபன் என்று பெயரிடப்பட்ட ஆண் சிவிங்கி புலி குனோ தேசிய பூங்காவிலிருந்து வழிதவறி வௌியேறி, 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பரோ கிராமத்தின் வயல்வௌிகளில் சுற்றி திரிகிறது. வயலில் சிவிங்கி புலியை கண்ட மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில், அதன் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதனை மீண்டும் காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
