கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனை தொடங்கியது.! தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை
டெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனை நடத்தி வருகின்றனர். கொரோனா பாதிப்பு நிலவரம், பொது சுகாதார முன்னேற்பாடுகள் குறித்தும், கொரோனா பரவல் 0.7%-லிருந்து 1.9% ஆக அதிகரித்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்து வருகின்றனர். இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1000க்கும் கீழ் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் 1000ஐ தாண்டி பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா நோய்தொற்றுக்கு மத்தியில், கொரோனா தொடர்பான நிலைமை மற்றும் பொது சுகாதாரத் தயார்நிலையை மதிப்பாய்வு செய்ய பிரதமர் மோடி உயர்மட்டக் கூட்டத்தை நடத்த உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில், இந்த கூட்டம் இன்று மாலை 4:30 மணியளவில் தொங்கியது. இந்த கூட்டத்தில், இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் எல். மாண்டவியா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும், இந்தக் கூட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
