2040ல் இந்தியாவின் விமானப் போக்குவரத்து 7% உயரும், 31,000 விமானிகள் தேவை : போயிங் நிறுவனம் கணிப்பு!!
டெல்லி : அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் விமானப் போக்குவரத்து 7% உயரும் என்று கனிந்துள்ள போயிங் நிறுவனம் 31,000 விமானிகள் தேவைப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. மும்பையில் நடைபெற்ற சிஐஐ அமைப்பின் நிகழ்ச்சியில் பேசிய போயிங் இந்தியா தலைவர் சலீல் குப்டே, அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் விமானப் போக்குவரத்து வளர்ச்சிக்கு ஈடுசெய்ய 31,000 விமானிகளும் 26,000 மெக்கானிக்குகளும் தேவைப்படுவார்கள் என்று தெரிவித்தார். அத்துடன் இந்த காலகட்டத்தில் ஒட்டு மொத்தமாக தெற்காசியாவும் குறிப்பாக இந்தியாவிலும் விமானப் போக்குவரத்துத் துறை பெருமளவு வளர்ச்சியை காணும் என்று கூறினார். போயிங், ஏர் பஸ் நிறுவனங்களிடம் இருந்து டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் கடந்த மாதம் 470 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து இருக்கும் நிலையில், விமான நிலையங்கள் மற்றும் அது சார்ந்த கட்டுமானங்களை உருவாக்குவதும் அவசியம் என்றும் தெரிவித்தார். 2040ல் இந்தியாவில் விமான போக்குவரத்து 7% உயரும் என்று போயிங் கணித்து இருப்பதை சுட்டிக் காட்டிய அவர், பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்றுவரக்கூடிய இந்தியா, விமானப் போக்குவரத்துத் துறையில் பெரிதும் வளர்ச்சியை எட்ட இருப்பதாக கூறினார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
