படகு கவிழ்ந்தது 9 மீனவர்கள் மாயம்

தினமலர்  தினமலர்
படகு கவிழ்ந்தது 9 மீனவர்கள் மாயம்



சியோல்,-தென் கொரியாவில் படகு கவிழ்ந்ததில், அதில் இருந்த மீனவர்கள் ஒன்பது பேர் மாயமாகினர். இவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவின் சினான் மாகாணத்தில் உள்ள தீவு அருகே மீனவர்களின் படகு நேற்று முன்தினம் விபத்துக்குஉள்ளானது.

படகின் இயந்திரத்தில் கடல் நீர் புகுந்ததை அடுத்து, தண்ணீரில் மூழ்கியது.

இது குறித்து தென்கொரியாவின் கடலோர காவல்படைக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, இங்குள்ள துறைமுக நகரான மோக்போவில் இருந்து சென்ற கடலோர காவல்படை வீரர்கள், படகில் இருந்த மூன்று பேரை உயிருடன் மீட்டனர். படகில் இருந்த மேலும் ஒன்பது மீனவர்கள் மாயமான நிலையில், அவர்களைத் தேடும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது.

காணாமல் போனவர்களில் ஏழு பேர் தென்கொரியாவைச் சேர்ந்தவர்கள் என்றும், இரண்டு பேர் வெளிநாட்டினர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

சியோல்,-தென் கொரியாவில் படகு கவிழ்ந்ததில், அதில் இருந்த மீனவர்கள் ஒன்பது பேர் மாயமாகினர். இவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவின் சினான்

மூலக்கதை