மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் 300வது ஷோரூம்: அமெரிக்காவின் டல்லஸ் நகரில் திறப்பு

தினமலர்  தினமலர்
மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் 300வது ஷோரூம்: அமெரிக்காவின் டல்லஸ் நகரில் திறப்பு

டல்லஸ்: உலகின் 6வது சில்லறை ஆபரண வர்த்தக நிறுவனமாக விளங்கும் மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸின் 300வது உலகளாவிய ஷோரூமின் திறப்பு விழாவானது அமெரிக்காவின் டல்லஸ் நகரில் நடைபெற்றது. காலின் நகரின் கவுண்டி கமிஷனரான சூஸன் பிளெட்சர் மற்றும் டெக்சாஸ் நகரின் மேயர் ஜெப் செனே ஆகிய இருவரும் மலபார் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் (சர்வதேச செயல்பாடுகள்) ஷாம்லால் அகமது முன்னிலையில் ஷோரூமைத் திறந்து வைத்தனர்.

மலபார் குழுமத்தின் தலைவர் எம்.பி.அகமது, துணைத்தலைவர் கே.பி.அப்துல் சலாம், இந்திய செயல்பாடுகளின் நிர்வாக இயக்குனர் ஓ.அஷர் மற்றும் குழும நிர்வாக இயக்குனர் ஏ.கே.நிஷாத் உள்ளிட்ட பலரும், குழும உறுப்பினர்களும் காணொலிக் காட்சி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மலபார் குழுமத் தலைவர் அகமது கூறியதாவது: அமெரிக்காவின் டல்லஸ் நகரில் 300வது ஷோரூமைத் திறக்கும் இந்த நிகழ்வு பெருமை தரும் தருணமாகும். இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோடு நகரில் ஒரு சிறிய ஷோரூமுடன் துவங்கி 30 ஆண்டுகளுக்குள் உலகெங்கிலும் 10 நாடுகளில் 300 ஷோரூம்கள் என்ற அளவில் வலுவானதொரு சில்லறை விற்பனை நிறுவனமாக நாங்கள் உருவெடுத்துள்ளோம்.

வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், ஊழியர்கள் மற்றும் பலருடைய உதவியால் தான் இது சாத்தியமானது. ஏற்கனவே எங்களது விற்பனை மையங்கள் துடிப்புடன் இயங்கிவரும் பிராந்தியங்களில் வலுவான செயல்பாட்டைத் தொடர்ந்து மேற்கொள்வோம். மேலும், பல்வேறான பொருட்கள், சேவைகள் மற்றும் உத்தரவாதங்களுடன் புதுப்புது சந்தைகளில் நுழையும் திட்டமும் வைத்துள்ளோம்.

பிராண்டை மக்கள் ஏற்று அதற்குத் தரும் பேராதரவுதான் உலகின் 'நம்பர் 1' ஆபரண சில்லறை வர்த்தக நிறுவனமாக வேண்டும் என்கிற இலக்கை நோக்கிப் பணிபுரியவும் விரிவாக்கம் செய்யவும் தேவையான பெரும் நம்பிக்கையைத் தந்துள்ளது. உலகளாவிய சில்லறை ஷோரூம்கள் விரிவாக்கத் திட்டத்திற்கு உதவும் விதமாக தனது உற்பத்தித் திறன்களை இன்னும் வலுவாக்கும் எண்ணமும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

உலகளாவிய விரிவாக்கம்

தனது விரிவாக்கத் திட்டத்தை இந்தியாவின் பிற மாநிலங்களிலும் மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் நிறுவனம் அமல்படுத்த உள்ளது. இத்திட்டத்தில் போபால், சூரத் உள்ளிட்ட பெருநகரங்கள் மட்டுமின்றி முக்கியமான 2ம் அடுக்கு சந்தைகளான இரிட்டி, அனகாபள்ளி, நான்டெட், வாபி, விழியநகரம் ஆகியவையும் அடங்கும். தனது உலகளாவிய விரிவாக்கல் திட்டத்தின் கீழ் இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, எகிப்து, கனடா, துருக்கி மற்றும் தென்னாப்பிரிக்காவிலும் கடைகளை திறக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த எதிர்கால விரிவாக்கல் திட்டத்தினால் சில்லறை வர்த்தகம், உற்பத்தித் துறை, தொழில்நுட்பம் நிர்வாகம் ஆகிய துறைகளில் கிட்டத்தட்ட 6000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது ஆம்னி சேனல் முயற்சிக்கு மெருகூட்டும் விதமாக மைக்ரோசாப்ட், ஐ.பி.எம், அக்சென்சர், இ அண்டு ஒய், டெலாய்ட் போன்ற தங்களது முக்கிய தொழில்நுட்பக் கூட்டு நிறுவனங்களின் சேவைகளும் கோரிப் பெறப்படுகின்றன.

10 வாக்குறுதிகள்

வசதியுடன் கூடிய ஆபரணம் வாங்கும் அதியற்புத அனுபவத்தைத் தருவதில் உலகப்புகழ் பெற்றுள்ள மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்காக '10 மலபார் வாக்குறுதிகள்' என்கிற தலைப்பில் அவர்களுக்கேற்ற கொள்கைகளுடன் ஒப்பற்ற தரம் மற்றும் சேவை உத்தரவாதமும் தருகிறது.

வாழ்நாள் முழுவதற்குமான பாராமரிப்பு, இலவசக் காப்பீடு, உத்திரவாதத்துடன் கூடிய பை-பேக் வசதி, ஐ.ஜி.ஐ, ஜி.ஐ.ஏ-தரச்சான்றிதழ் பெற்று உலகெங்கும் நடத்தப்படும் 28-அம்ச தரச்சோதனைகளில் தேறிய நகைகள், தங்க பரிவர்த்தனையில் ஜீரோ கழிவு, பரிபூரண ஒளிவுமறைவின்மை, 916-ஹால்மார்க் முத்திரையுடன் கூடிய தூய தங்கம், பொறுப்பான முறையில் தங்கம் பெறுதல், நியாய விலை, நியாயமான தொழிற்பயிற்சி உட்பட அனைத்தும் 'மலபார் வாக்குறுதி'களில் அடங்கும்.

பொறுப்பான முறையில் தங்கத்தைக் கொள்முதல் செய்தல், தார்மீக முறையில் தொழில் பயிற்சி செய்தல், ஒளிவுமறைவற்ற, தொழில்முறை நிர்வாகம் ஆகியவற்றின் மூலம் விதிமுறைகளை ஒன்று விடாமல் மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் நிறுவனம் பின்பற்றிவருகிறது. வெற்றிகரமாகச் செயல்படும் பெரும்பாலான நிறுவனங்கள் பொறுப்புணர்வு, நீடித்து நிலைக்கும் தன்மையைத் தனது முக்கியத் தொழிற்பயிற்சியாக ஆக்குவதாக மலபார் குழுமம் நம்புகிறது. 1993ல் தொழில் துவங்கியது முதல் லாபத்தில் 5 சதவீதத்தை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சமூகத்தின் தேவைக்கு இக்குழுமம் ஒதுக்கி வந்துள்ளது. பசி, சுகாதார நலம், மகளிர் மேம்பாடு, வீட்டு வசதி, சுற்றுப்புறச் சூழல் ஆகிய முக்கியத் துறைகளை குவிமையமாக்கி இக்குழுமம் செயல்பட்டு வருகிறது.

துவக்கம்

ஆண்டுக்கு 4.1 பில்லியன் டாலர் வருமானத்துடன் இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமாக விளங்கும் மலபார் குழுமத்தின் முக்கிய நிறுவனமாக 1993ல் மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் நிறுவனம் துவங்கப்பட்டது. தற்போது ஆபரண விற்பனையில் உலகின் 6வது மாபெரும் சில்லறை வர்த்தக நிறுவனம் என்ற பெருமையுடன் விளங்கும் இந்நிறுவனத்தின் வலுவான சில்லறை வர்த்தக நெட்வொர்க்கில் இந்தியா, மத்தியக் கிழக்காசிய நாடுகள், கிழக்காசிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகளில் அமைந்துள்ள 300 விற்பனை மையங்கள், பலவித அலுவலகங்கள், டிசைன் சென்டர்கள், உற்பத்திப் பிரிவுகள், தொழிற்சலைகள் ஆகியவை அடங்கும்.

4000க்கும் அதிகமான பங்குதாரர்களுக்குச் சொந்தமான இக்குழுமத்தில் நிறுவனத்தின் தொடர் வெற்றிக்குப் பணியாற்ற தம்மை அர்ப்பணித்துள்ள 26 நாடுகளைச் சேர்ந்த 16,500க்கும் மேற்பட்ட தொழில்முறைப் பணியாளர்களும் அடங்குவர். www.malabargoldanddiamonds.com என்கிற ஆன்லைன் ஸ்டோரில் மலபார் கோல்டு அண்டு டைமன்ட்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்த படியே தமக்குப் பிடித்த ஆபரணங்களை எந்நேரத்திலும் எந்நாளிலும் வாங்கலாம்.

டல்லஸ்: உலகின் 6வது சில்லறை ஆபரண வர்த்தக நிறுவனமாக விளங்கும் மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸின் 300வது உலகளாவிய ஷோரூமின் திறப்பு விழாவானது அமெரிக்காவின் டல்லஸ் நகரில் நடைபெற்றது. காலின்

நிலத்தில் முதலீடு செய்யும் ஆசை மக்களுக்கு அதிகரித்து வந்தாலும், எங்கு எப்படி எவ்வளவு கொடுத்து வாங்குவது போன்ற குழப்பங்கள் நீடித்து வருகிறது.

மூலக்கதை