அமெரிக்காவில் மீண்டும் நடைபெற்ற துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் மீண்டும் நடைபெற்ற துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9ஆக உயர்வு

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் மீண்டும் நடைபெற்ற துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.கலிபோர்னியா அருகே ஹாப்மூன் பே பகுதியில் 2 இடங்களில் துப்பாக்கிசூட்டில் 7- பேர் உயிரிழந்து 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இயோவோ பகுதியில் நடந்த மற்றொரு  துப்பாக்கிசூடு சம்பவத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் அடுத்தடுத்த நடைபெற்ற சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மான்டெரி பார்க் நகரில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ள இங்கு, ஆயிரக்கணக்கானோர் ஒன்றாகக்கூடி சீன புத்தாண்டை கொண்டாடிக்கொண்டிருந்தபோது அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை இரவு 10.22 மணி அளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.நடன அரங்கில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர் ஒரு ஆண் என்றும், கையில் வைத்திருந்த இயந்திர துப்பாக்கியைக் கொண்டு அவர் கண்மூடித்தனமாக சுட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டை அடுத்து அங்கிருந்தவர்கள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு பாதுகாப்பான இடம் நோக்கி ஓடியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் இருவேறு இடங்களில் நடந்த துப்பாக்கி சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் படுகாயம் அடைந்ததாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை