அமீரக தேசிய தினத்தை ஒட்டி தமிழ் அமைப்பு சார்பில் துபாயில் வாகன பேரணி

தினகரன்  தினகரன்
அமீரக தேசிய தினத்தை ஒட்டி தமிழ் அமைப்பு சார்பில் துபாயில் வாகன பேரணி

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் 51வது தேசியதினத்தை முன்னிட்டு துபாய் மம்ஸார் பகுதியில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அமைப்பின் தலைவி ஷீலா தலைமையில் பிரமாண்டமான பேரணி மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.இப்பேரணியில் 51 குழந்தைகள் அமீரகத்தின் தேசிய கொடியுடன், 51 சைக்கிள், 51 பெண்கள், 51மீட்டர் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய கொடியேந்தி 51 வாகனங்களின் அணிவகுப்புடன் பிரமாண்டமான பேரணி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு கௌரவ விருந்தினராக அமீரகத்தைசேர்ந்த ஸாலிம் பின் அவாத் அல் காதிரி, மற்றும் மலையாள நடிகை ஷீலா பிந்து, பால் பிரபாகர், அரவிந்த், குழும நிறுவனங்களின் நிறுவனர், ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.மேலும் மக்கள் ஆர்.ஜே சாரா,  மரிக்கா,  கே.வி.எல்.கமால், அறிவோம் தெளிவோம் ஆர்.ஜே மோனிகா டிக்டாக் பிரபலங்கள், துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் சேக், ஹாஜா அலாவுதீன் உள்ளிட்டோரும் மற்றும் அருணா மொழில், ஆண்ட்ரோ, கருவாயன், கல்ப் கட்ஸ் பிரவின், துபாய் புல்லிங்கோ ஷாநவாஸ், அயாஸ், ஜனனி, மற்றும் புல்லிங்கோ குழுவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.இந்நிகழ்ச்சி குறித்து அமீரக தமிழ் சங்கத்தின் தலைவி ஷீலா கூறுகையில்; இது ஒரு வெற்றிகரமான நிகழ்வாக இருந்ததில் பெருமிதம் கொள்கிறோம் எனவும் மேலும் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த ஆதரவாளர்கள் அனைவர்க்கும் மனமார்ந்த நன்றிகள் என மகிழ்வுடன் தெரிவித்தார்.

மூலக்கதை