கனடாவில் விபத்து: இந்திய மாணவர் பலி

தினமலர்  தினமலர்
கனடாவில் விபத்து: இந்திய மாணவர் பலி



டொரான்டோ : கனடாவில் இந்திய மாணவர் ஒருவர், டிரக் மோதி பலியானார்.



வட அமெரிக்க நாடான கனடாவின் டொரன்டோ நகரில் உள்ள கல்லுாரியில், நம் நாட்டின் ஹரியானாவைச் சேர்ந்த கார்த்திக் சைனி, 20, என்ற மாணவர் படித்து வந்தார். சமீபத்தில் கல்லுாரிக்கு சைக்கிளில் சென்ற அவர், சாலையைக் கடக்க முயன்றார்.

அப்போது வேகமாக வந்த டிரக் அவர் மீது மோதியது. சிறிது துாரம் இழுத்துச் செல்லப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். கார்த்திக்கின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். விபத்து தொடர்பாக டொரன்டோ போலீசார் விசாரிக்கின்றனர்.

டொரான்டோ : கனடாவில் இந்திய மாணவர் ஒருவர், டிரக் மோதி பலியானார்.வட அமெரிக்க நாடான கனடாவின் டொரன்டோ நகரில் உள்ள கல்லுாரியில், நம் நாட்டின் ஹரியானாவைச் சேர்ந்த கார்த்திக் சைனி, 20, என்ற

மூலக்கதை